நீட் தேர்வு ரத்து செய்வது எப்படி?: ரகசியத்தை உடைத்த உதயநிதி

Updated : மார் 14, 2023 | Added : மார் 14, 2023 | கருத்துகள் (84) | |
Advertisement
அரியலூர்: ‛எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம்' என கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி.அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி உயிரை மாய்த்த மாணவி ‛அனிதா'வின் பெயரில் புதிய அரங்கம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி
How to cancel NEET exam?: Udhayanidhi breaks the secret  நீட் தேர்வு ரத்து செய்வது எப்படி?: ரகசியத்தை உடைத்த உதயநிதி

அரியலூர்: ‛எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம்' என கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி.

அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி உயிரை மாய்த்த மாணவி ‛அனிதா'வின் பெயரில் புதிய அரங்கம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: நீட் தேர்வு ரகசியத்தை கூறுமாறு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அந்த ரகசியம் வேறொன்றுமில்லை. எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், அந்த ரகசியம். இப்போது அனிதாவின் பெயரில் அந்த அரங்கம் திறக்கப்படுகிறது. அந்த அரங்கத்தையும், அதன் பெயர் பலகையை பார்க்கும்போதும் நீட் தேர்வு ரத்து தான் உங்களுடைய நினைவிற்கு வரவேண்டும்.



latest tamil news

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை சட்டப் போராட்டம் தொடரும். கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்தபோதும், நீட் ரத்து குறித்து கோரிக்கை விடுத்தேன். அவர் நீட் தேர்வின் நன்மைகள் குறித்து பல்வேறு காரணங்களை கூறினார். ஆனால் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும்வரை சட்டப்போராட்டத்தை தொடர்வோம் என இறுதியாக சொல்லிவிட்டு தான் வந்தேன். அதுதான் அந்த ரகசியம். இவ்வாறு அவர் பேசினார்.



பிளஸ் 2 மாணவர்களுக்கு ‛சான்ஸ்'

நேற்று (மார்ச் 13) துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி கூறுகையில், ‛நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் பேசி மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (84)

Narayanan - chennai,இந்தியா
20-மார்-202312:35:10 IST Report Abuse
Narayanan ஏதோ வெட்கம் மானம் ரோசம் சூடு சொரணை என்றெல்லாம் பேசினாரே. இவர் தன்னை கிள்ளி பார்த்துக்கொள்ளவேண்டும் கண்ணாடி முன்னாடி நின்று இந்த கேள்விகளை கேட்டுக் கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
Kumar - California,யூ.எஸ்.ஏ
16-மார்-202321:42:37 IST Report Abuse
Kumar அடடே ஆச்சர்யக்குறி! போயா போ அரசியல் ஞானி. உண்மையை உடைத்துவிட்டார். முட்டு கொடுக்க முடியவில்லை. தமிழ்நாடு மாணவர்களே இவர் தான் நாளைய திருட்டு முட்ட கரகாட்டக்காரர்களின் தலைவர். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தான் நிர்ணயம் செய்யவேண்டும். விழித்திக்கொண்டு செயல்படுங்கள். வெற்றி உங்களுக்கே இந்த மாதிரி கழிசடைகளை தூக்கி எறியுங்கள்....
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
16-மார்-202310:34:13 IST Report Abuse
vijay இதுக்கு எதுக்குயா வெள்ளையும் சொள்ளையுமா அலையனும், வோட்டுக்கு ஊரை ஏமாத்தணும். இப்போவாச்சும் வோட்டு போட்ட அறிவிலிகள் புரிஞ்சிக்கோங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X