இலங்கை - தனுஷ்கோடி கடலில் நீந்திய ஏழு பேர்

Added : மார் 14, 2023 | |
Advertisement
ராமேஸ்வரம்:கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஏழு நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இலங்கை முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்தினர்.பெங்களூரைச் சேர்ந்த பிரசாந்த், ராஜசேகர், சிவரஞ்சனி, மஞ்சரி, சுசிதா உட்பட ஏழு பேர், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள். மேலும், நீச்சல் பயிற்சி பெற்றவர்கள்.இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை
 இலங்கை - தனுஷ்கோடி  கடலில் நீந்திய ஏழு பேர்

ராமேஸ்வரம்:கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஏழு நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இலங்கை முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்தினர்.

பெங்களூரைச் சேர்ந்த பிரசாந்த், ராஜசேகர், சிவரஞ்சனி, மஞ்சரி, சுசிதா உட்பட ஏழு பேர், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள். மேலும், நீச்சல் பயிற்சி பெற்றவர்கள்.

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை கடலில் நீந்த முடிவு செய்தனர். இதற்கான 12ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் இலங்கை சென்றனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு தலைமன்னார் கடலில் குதித்து 23 கி.மீ., துாரம் நீந்தி மாலை 3:40 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தனர்.

முதலில் அஜித், சுமா ராவ் ஆகிய இருவரும் நீந்தத் துவங்கினர். அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதும், அடுத்த வீரர், வீராங்கனைகள் கடலில் குதித்து நீந்தினர். இறுதியாக பிரசாந்த், மஞ்சூரி நீந்தி கரையை அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X