ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி காளிராஜூக்கு ஏழு ஆண்டுகள்சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார் 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ், 48, திருமணமானவர். இவர் 2021ல், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். காளிராஜை சிவகாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
காளிராஜுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தும், நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.