அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

Added : மார் 14, 2023 | |
Advertisement
கருமத்தம்பட்டி:கரிச்சிபாளையம் அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.மோப்பிரிபாளையம் பேரூராட்சி கரிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகர் பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, 12 ம்தேதி மாலை, தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதலுடன் துவங்கியது.மாலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, வாஸ்து பூஜையுடன் முதல்கால ஹோமம்
 அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கருமத்தம்பட்டி:கரிச்சிபாளையம் அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

மோப்பிரிபாளையம் பேரூராட்சி கரிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகர் பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, 12 ம்தேதி மாலை, தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதலுடன் துவங்கியது.

மாலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, வாஸ்து பூஜையுடன் முதல்கால ஹோமம் நடந்தது.

பூர்ணாஹுதி, தீபாராதனை முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெருமாளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் 7:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம் திருப்பல்லாண்டு, வேத பாராயணம், திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டு, 9:30 மணிக்கு, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகர் பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X