மலிவான அரசியலுக்கு பலியாகாதீங்க ராகுல்!
மலிவான அரசியலுக்கு பலியாகாதீங்க ராகுல்!

மலிவான அரசியலுக்கு பலியாகாதீங்க ராகுல்!

Added : மார் 16, 2023 | கருத்துகள் (27) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி?' என்றான் பாரதி. இந்தியராகிய நமக்குள், ஜாதி, மதம், இனம், மொழி என்று எத்தனையோ வேற்றுமைகள். ஆனாலும், அந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம்
Dont fall victim to cheap politics Rahul!  மலிவான அரசியலுக்கு பலியாகாதீங்க ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி?' என்றான் பாரதி. இந்தியராகிய நமக்குள், ஜாதி, மதம், இனம், மொழி என்று எத்தனையோ வேற்றுமைகள். ஆனாலும், அந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் பண்பாடு; அதுவே, ஜனநாயகத்தின் ஒரு அம்சம். நம் நாட்டில் வாரிசு அரசியலை துவக்கி வைத்து, ஜனநாயகத்திற்கு சாவுமணி அடித்தது, நேரு குடும்பம். அதன்பின், பல மாநிலங்களிலும் வாரிசுகளின் ராஜ்ஜியம் தான்.


நாட்டில் ஜனநாயகம் சாவதற்கு காரணமானது காங்கிரஸ். அந்தக் கட்சியைச் சேர்ந்த ராகுல், வெட்கமில்லாமல், தன்னிலை மறந்து, வந்த வழி நினைவின்றி, வெளிநாட்டில் போய், 'இந்தியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டது' என்று பேசிவிட்டு வந்துள்ளார். இது, மல்லாக்கப் படுத்து, எச்சில் உமிழ்வது போன்றது.


பிரிட்டனில் ராகுலை பேசச் சொன்ன தலைப்பு, 'ஜனநாயகம்' அதைப்பற்றி பொதுப்படையாக, எத்தனையோ கருத்துகள் கூறலாம். இருந்தும், இந்த மகானுபாவர், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தன் தாயகத்தின் மீதே சேற்றை வாரி வீசியது வேதனையானது.


latest tamil news

'ஜனநாயகத்திற்கு, ஆர்.எஸ்.எஸ்., வாயிலாக தீங்கு விளைந்துள்ளது' என்று கூறியுள்ளார் ராகுல். ஒரு தொண்டு அமைப்பு, நாட்டுக்கு தீமை செய்துள்ளது என்பது அவரது வாதம் என்றால், இவரும், இவர் சார்ந்த காங்., கட்சியும், பல காலம் நாட்டை ஆண்ட போது, தேனாறும், பாலாறுமா ஓடியது... அப்படி இவர்கள் செய்த நன்மைகள் என்ன... விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டர் முதல், மண்ணில் விளையும் நிலக்கரி வரை, காங்., ஆட்சியில் செய்த ஊழலுக்கு பெயர் என்னவோ?


ஒவ்வொரு மாநிலத்திலும், இரட்டை வேடம் போடும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக அவர்களுக்கு பல்லக்கு துாக்கும், காங்கிரஸ் கட்சியினர் தான், ஜனநாயகத்தை மட்டுமின்றி, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தங்கள் கட்சியின் பெருமையையும் குழி தோண்டி புதைத்து விட்டனர் என்றால், அது மிகையில்லை. காங்கிரசார் முதுகில் இத்தனை அழுக்கு இருக்கும் போது, வெளிநாட்டில் போய், தாய்நாட்டை பற்றி அவதுாறாகப் பேசுவது தர்மமா?


பேச்சு என்பது ஒரு கலை; அளவோடு, சுருக்கமாக, தேவையானதை மட்டும், சொற்பொழிவோடு சபைகளில் பேச வேண்டும். திண்ணைப் பேச்சு வீணர்கள் போல, அண்டை நாட்டில் போய், அன்னை நாட்டை பற்றி கேவலமாகப் பேசுவது படித்தவருக்கு அழகா? ஒருவேளை, ஆட்சி பறிபோன வயிற்றெரிச்சலின் வெளிப்பாடா இது?


ராகுல் அவர்களே... ஜவஹர்லால் நேரு காலத்தில், பார்லிமென்டில் நடந்த சிறப்பான, நாகரிகமான விவாதங்களை படியுங்கள்; எங்கே எதை பேச வேண்டும் என்று, சான்றோரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். 'நேருவின் கொள்ளுப்பேரன்' என்ற பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். மலிவான அரசியலுக்கு பலியாகாதீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (27)

g.s,rajan - chennai ,இந்தியா
16-மார்-202321:23:49 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் அரசியல் மலிவு இல்லை மிகவும் காஸ்ட்லி....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-மார்-202321:12:03 IST Report Abuse
M  Ramachandran அரசியலுக்காக்க தன சொந்த நாட்டையெ எதிரிகளிடம் அடமானம் வைக்கும் கும்பல் அதிகரித்து கொண்டே போகிறது . பதவி பசி யேதையும் செய்ய துணிச்சல் கொடுக்கிறது. மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாட்டின் முனேற்றம் எதிரி நாடுகளிடம். அது கேள்விக்குறியாகிவிடும்
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
16-மார்-202319:54:13 IST Report Abuse
 Madhu 'கட்சிக்கு உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் கெட்ட பெயர் ஏற்படுத்தி கட்சிக்கும் நாட்டிற்கும் களங்கும் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் திரு. ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக‌ நீக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவரும் திரு. ராகுல் காந்தியுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது ' என்பது போன்ற அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக வெளியிட்டால்தான் இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது எனப் பொருள். செய்வாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X