ரவுடிகள் மீண்டும் மீண்டும் அட்டகாசம்: போலீஸ் உதவி செய்யாததால் கடையை மூடிவிட்டு ஓடிய வியாபாரி

Updated : மார் 16, 2023 | Added : மார் 16, 2023 | கருத்துகள் (42) | |
Advertisement
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கஞ்சா போதை ரவுடிகளுக்கு பயந்து கடையை மூடிவிட்டு சிமென்ட் வியாபாரி ஓடினார்.திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 56. இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தில் சுபம் டிரேடர்ஸ் என்ற பெயரில் சிமென்ட் கடை வைத்திருக்கிறார். இவரது கடைக்கு அருகில் கஞ்சா போதையில் வரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கஞ்சா போதை ரவுடிகளுக்கு பயந்து கடையை மூடிவிட்டு சிமென்ட் வியாபாரி ஓடினார்.




latest tamil news


திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 56. இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தில் சுபம் டிரேடர்ஸ் என்ற பெயரில் சிமென்ட் கடை வைத்திருக்கிறார்.

இவரது கடைக்கு அருகில் கஞ்சா போதையில் வரும் ரவுடிகள் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதால் இவரது கடை வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை ரவுடிகள் முத்துராமலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். நெமிலி போலீசில் அவர் புகார் அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.



latest tamil news


பயந்து போன முத்துராமலிங்கம், கடை ஷட்டரில் ஒரு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அதில் கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால், இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது, பாதுகாப்பு கருதி, சுபம் டிரேடர்ஸ் என எழுதி நோட்டீஸ் ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு நேற்று சென்று விட்டார்.

இந்த செய்தி சமூக வளைதலங்களில் வைரலாகியது. இந்நிலையில் தக்கோலம் போலீசார் வியாபாரியை சமாதானப்படுத்தியதால், அவர் இன்று (மார்ச் 16) காலை 10:00 மணிக்கு கடையை திறந்தார். சிறிது நேரத்தில் கஞ்சா போதையில் வந்த ரவுடிகள் பிரச்னை செய்ததால் மீண்டும் கடையை மூடிவிட்டு அவர் ஓடி விட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

Raa - Chennai,இந்தியா
20-மார்-202316:08:07 IST Report Abuse
Raa இருக்கும் வியாபாரிகளை பாதுகாக்க வழியில்லை....எந்த லட்சணத்தில்] இருந்து முதலய ஈர்த்து பிசினஸ் பண்ணப்போறாங்களாம்.
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
17-மார்-202310:06:23 IST Report Abuse
Sureshkumar ரவுடிகள் ஆட்சி செய்யும்போது, ரவுடிகளுக்கு ஏது பஞ்சம்? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழ்நாட்டு மக்களே .
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
17-மார்-202310:06:02 IST Report Abuse
Sureshkumar ரவுடிகள் ஆட்சி செய்யும்போது, ரவுடிகளுக்கு ஏது பஞ்சம்? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழ் மக்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X