அறநிலையத்துறை நிலத்தில் அனுமதியின்றி மரம் அகற்றம்

Added : மார் 17, 2023 | |
Advertisement
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் அமைந்துள்ளது, ஜெகந்நாத பெருமாள் கோவில்.இங்கு, ஆழ்வார் பிறந்த தளம் அமைந்துள்ள பகுதியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 80 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தில் புளியமரம் உட்பட பல மரங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான புளியரம் ஒன்றை, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அகற்ற வேண்டுமென, ஹிந்து அறநிலையத்துறை
 அறநிலையத்துறை நிலத்தில் அனுமதியின்றி மரம் அகற்றம்

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் அமைந்துள்ளது, ஜெகந்நாத பெருமாள் கோவில்.

இங்கு, ஆழ்வார் பிறந்த தளம் அமைந்துள்ள பகுதியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 80 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் புளியமரம் உட்பட பல மரங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான புளியரம் ஒன்றை, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அகற்ற வேண்டுமென, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, அதிகாரிகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் உள்ள மரத்தை அகற்ற முடியாது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், 200 ஆண்டுகள் பழமையான புளியமரத்தை, அந்த தனிநபர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினார்.

தகவலறிந்த ஜெகந்நாத பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X