இந்திய வங்கி அமைப்பு வலுவாக உள்ளது: ஆர்.பி.ஐ., கவர்னர்

Updated : மார் 17, 2023 | Added : மார் 17, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்திய வங்கி அமைப்பு தொடர்ந்து வலுவாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்றார். அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால், வங்கித் துறை மீது அழுத்தம் ஏற்பட்டிருக்கும் சூழலில் இக்கருத்தை அவர் கூறியுள்ளார்.கடந்த ஒரு வாரமாக அமெரிக்க வங்கி அமைப்பு அழுத்தத்தில் உள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் (SVB) தோல்விக்குப் பிறகு,
Indian banking system is strong: RBI, Governor  இந்திய வங்கி அமைப்பு வலுவாக உள்ளது: ஆர்.பி.ஐ., கவர்னர்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்திய வங்கி அமைப்பு தொடர்ந்து வலுவாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்றார். அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால், வங்கித் துறை மீது அழுத்தம் ஏற்பட்டிருக்கும் சூழலில் இக்கருத்தை அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அமெரிக்க வங்கி அமைப்பு அழுத்தத்தில் உள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் (SVB) தோல்விக்குப் பிறகு, மேலும் இரண்டு வங்கிகளும் அமெரிக்காவில் மூடப்பட்டன. அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டாளர்கள் மார்ச் 10 அன்று சிலிக்கான் வேலி வங்கியை (SVB) கட்டுப்பாட்டில் எடுத்தனர். டெபாசிட் பணத்தைப் பாதுகாக்க அதன் சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வங்கியில் இருந்து டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கிய பிறகு வங்கிக்கு அழுத்தம் அதிகரித்தது. மக்களுக்கு பணத்தை விநியோகிக்க வங்கி பத்திரங்களில் வைத்திருந்த தனது முதலீட்டை விற்க வேண்டியிருந்தது. வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் பத்திரங்களில் செய்திருந்த முதலீட்டின் மதிப்பு குறைந்திருந்தது. எஸ்.வி.பி., வங்கி கடந்த வாரம் ரூ.14,400 கோடி நஷ்டத்தில் யு.எஸ்., டிரஷரீஸ் மற்றும் மார்ட்கேஜ் ஆதரவு கொண்ட ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை விற்றது. இதனால் உலகளவில் வங்கி அமைப்புகளின் செயல்பாடு குறித்த சந்தேகம் எழுந்தது. அதனை தெளிவுப்படுத்தும் வகையில் ஆர்.பி.ஐ., கவர்னர் பேசியுள்ளார்.


latest tamil news

பெடரல் வங்கி ஏற்பாடு செய்த கே.பி.ஹார்மிஸ் 17வது நினைவு உரையில் ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது: வங்கி அமைப்பின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய வங்கி அமைப்பு வளர்ச்சியடைந்த விதம் மற்றும் அது தற்போது நிலைநிறுத்தப்பட்ட விதத்தினால் வலுவானதாக இருக்கும்.


அமெரிக்காவில் வங்கி அமைப்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், விவேகமான சொத்து - கடன் மேலாண்மை, வலுவான ரிஸ்க் மேலாண்மை, கடன் மற்றும் சொத்துக்களில் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. கோவிட் தொற்றுநோயின் உச்சத்தின் போது, ​​அதன் ஆழம் தெரியவில்லை. அதனால் கூடுதல் மூலதனங்களை உருவாக்க வங்கிகளை தொடர்ந்து வலியுறுத்தினோம். வங்கி அவற்றை உருவாக்கின. இவ்வாறு தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

18-மார்-202310:12:13 IST Report Abuse
அப்புசாமி இங்கே லஷ்மி விலாஸ் பேங்க் திவாலானபோது மக்கள் பணத்தை எடுக்க முடியாம அடிச்சாங்களே ஒரு கூத்து. இது மாதிரி அங்கே பண்ண முடியாது. பணம் இருந்தால் பேங்கை நடத்து. இல்லேன்னா இழுத்து மூடு. அவ்வளவுதான். அதுசரி. லஷ்மிவிலாஸ் பேங்க் திவாலான போது சக்தி தானே கெவுனரு?
Rate this:
18-மார்-202314:59:11 IST Report Abuse
ஆரூர் ரங்கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த வங்கியும் திவால் ஆனதில்லை. திடீரென பெரும்பாலானவர்கள் பணத்தை எடுக்க முயற்சித்தால் பிரச்சினை எழுந்ததுண்டு. LVB DCB va ங்கி யுடன் இணைய ஒருமாதம் ஆனது. ஆனாலும் காப்பாற்றி விட்டார்கள் ....
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
18-மார்-202309:04:45 IST Report Abuse
Ram intha மெகா திருடனால்தான் வீடு கடன் வட்டி உயர்ந்துகொண்டே போகிறது
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மார்-202304:10:16 IST Report Abuse
Mani . V ஏனென்றால், சங்கர் சிமெண்ட் உபயோகப்படுத்தியதால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X