தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப். 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. போர் துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இப்போரால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
![]()
|
இந்நிலையில் குழந்தைகள் உரிமை அமைப்பு ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றநீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது, அப்பாவி மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்தது போன்ற
போர் குற்றங்கள் புரிந்துள்ளா்ர. இதற்கு புடின் தான் பொறுப்பு என குற்றம்சாட்டியதையடுத்து கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இது ஆரம்பம் தான், இனி புடின் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றார்.