ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

Updated : மார் 18, 2023 | Added : மார் 17, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப். 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. போர்
Arrest warrant against Russian President Putin: International Court of Justice takes action  ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப். 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. போர் துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இப்போரால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் குழந்தைகள் உரிமை அமைப்பு ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றநீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது, அப்பாவி மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்தது போன்ற

போர் குற்றங்கள் புரிந்துள்ளா்ர. இதற்கு புடின் தான் பொறுப்பு என குற்றம்சாட்டியதையடுத்து கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இது ஆரம்பம் தான், இனி புடின் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

18-மார்-202310:50:38 IST Report Abuse
தமிழ் இவர்களால் புடினை தொடக்கூட முடியாது.
Rate this:
Cancel
மண்ணின் மைந்தன் - Dharampurai ,இந்தியா
18-மார்-202308:28:08 IST Report Abuse
மண்ணின் மைந்தன் ஒரு நடவடிக்கை எடுக்க முடியாது. எல்லாம் உக்ரைனை திருப்தி படுத்த மட்டுமே.
Rate this:
Cancel
Nicolthomson - Chikkanayakkanahalli, bengaluru, tumkuru dt,இந்தியா
18-மார்-202305:05:38 IST Report Abuse
Nicolthomson அப்போ நிஜம்மாவே இந்த குற்றங்களை இராக்கில் புரிந்த அமெரிக்க அதிபர் மீது என்ன நடவடிக்கை எடுத்த்தீங்க ... இந்த செயல்களை செய்து வருது என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X