விவசாயிகளின் மீது அதிக கவனம் செலுத்தும் அரசு: பிரதமர் மோடி
விவசாயிகளின் மீது அதிக கவனம் செலுத்தும் அரசு: பிரதமர் மோடி

விவசாயிகளின் மீது அதிக கவனம் செலுத்தும் அரசு: பிரதமர் மோடி

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: சுதந்திரத்திற்குப் பிறகு, சிறு தானிய விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தும் அரசாக பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச சிறுதானிய மாநாட்டை இன்று (மார்ச் 18) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த மாநாடு இன்றும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சுதந்திரத்திற்குப் பிறகு, சிறு தானிய விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தும் அரசாக பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.




latest tamil news


2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச சிறுதானிய மாநாட்டை இன்று (மார்ச் 18) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. பின்னர் அவர், சர்வதேச சிறுதானிய ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார்.


நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சிறுதானிய சந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும். சிறுதானிய விவசாயம் 2.5 கோடி விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். சிறுதானியம் உற்பத்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு துணைப் புரியும். இளைஞர்களின் பங்களிப்பு, சிறுதானிய துறையில் அதிகரித்து வருகிறது.



latest tamil news


இந்தியாவில் 75 லட்சம் விவசாயிகள் இந்த மாநாட்டில் நம்முடன் இணைந்து இருக்கின்றனர். சிறுதானிய விவசாயம் 12-13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இங்கு தற்போது சிறுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளது.சுதந்திரத்திற்குப் பிறகு, சிறு தானிய விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தும் அரசாக பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது. சிறுதானிய விவசாயம் கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (15)

K.n. Dhasarathan - chennai,இந்தியா
18-மார்-202321:56:34 IST Report Abuse
K.n. Dhasarathan ஏறத்தாழ 30 மாதங்கள் விவசாயிகள் போராட்டம் பண்ணியபோது எட்டிக்கூட பார்க்காத பிரதமர் விவசாயிகள் மீது அதிக அக்கறை உள்ளவரா ?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-மார்-202321:22:35 IST Report Abuse
g.s,rajan அதுதான் டெல்லியில ரொம்ப மாசமா பாத்தோமே ....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-மார்-202321:17:26 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் விவசாயம் எப்பவோ செத்துப்போச்சு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X