பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: அமித்ஷா பேச்சு

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ஆமதாபாத்: இந்தியா சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுள்ளார். இதற்காக குஜராத்துக்கு வருகை தந்த அவருக்கு, மக்கள் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து காந்திநகரில் நடந்த 49-வது பால் பண்ணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: இந்தியா சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.




latest tamil news


குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுள்ளார். இதற்காக குஜராத்துக்கு வருகை தந்த அவருக்கு, மக்கள் வரவேற்பு அளித்தனர்.


இதையடுத்து காந்திநகரில் நடந்த 49-வது பால் பண்ணை ஆலையின் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: சுதந்திரம் பெற்ற பிறகு, பால் உற்பத்தியானது 10 மடங்காக பெருகி உள்ளது. நமது பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 12.6 கோடி லிட்டர். இது உலக அளவில் அதிகம்.



latest tamil news


இந்திய பொருளாதாரத்தில் பால் பண்ணை பிரிவானது ஒரு முக்கிய அம்சம் வகிப்பதுடன், ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு பங்காற்றி உள்ளது. இந்த பால் பண்ணை அமைப்புடன் 45 கோடி மக்கள் தொடர்பில் உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக பால்பண்னை துறை அதிகளவு உழைத்துள்ளது. இதில் விவசாயிகளின் பங்கு அதிகம். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

g.s,rajan - chennai ,இந்தியா
18-மார்-202322:18:41 IST Report Abuse
g.s,rajan நாட்டு மாடு மற்றும் எருமை மாடுகள்,பசு மாடுகள் குறைந்த அளவே பால் கறக்கும் ,சுவையாக இருக்கும் .சிந்து கலப்பின மாடுகள் பத்து லிட்டர் வரை பால் கறக்கும் தன்மை உடையவை ஆனால் சுவை பிற மாடுகளின் பாலை விட சற்று குறைந்தே இருக்கும் ....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-மார்-202322:15:34 IST Report Abuse
g.s,rajan அப்புறம் ஏன் பால் விலை குறையவில்லை... ???
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
18-மார்-202316:08:37 IST Report Abuse
Sivaraman தமிழ்நாட்டில் ஏன் கஷ்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X