பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் கைது: 24 மணிநேரத்திற்கு தொலைதொடர்பு சேவைகள் முடக்கம்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர். பதற்றத்தை தணிக்க அங்கு 24 மணிநேரத்திற்கு தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு
Punjab, Khalistani Sympathiser, Amritpal Singh, Police, Arrest, பஞ்சாப், காலிஸ்தான், அம்ரித்பால் சிங், போலீஸ், கைது, தொலைதொடர்பு, முடக்கம்

சண்டிகர்: பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர். பதற்றத்தை தணிக்க அங்கு 24 மணிநேரத்திற்கு தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டு வருகிறது. பஞ்சாபில் கடந்த பிப்.,23ல் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்ததை கண்டித்து அந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர், கத்தி, வாளுடன் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.



latest tamil news

இந்நிலையில் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை பஞ்சாப் போலீசார் இன்று (மார்ச் 18) கைது செய்தனர். இதனால் ஏற்படும் பதற்றத்தை போக்க, அங்கு போன் அழைப்பு, வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகள் தவிர இணைய சேவை, எஸ்.எம்.எஸ் சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 வரை முடக்கப்படுவதாக பஞ்சாபின் உள்துறை மற்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

Muthu - Nagaipattinam,இந்தியா
22-மார்-202306:14:18 IST Report Abuse
Muthu விரைவில் ஒரு சட்டம் வரும். அதன்படி, இந்தியமண்ணில் "பிரிவினை பேசும் எவரையும் கண்டதும் சுட உத்தரவு" என வரும். அதன்பின் தான் இந்த காலிப்பயல்கள் ஒருங்குவார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-மார்-202310:15:44 IST Report Abuse
M  Ramachandran இந்த காலிப்பயல் காலிஸ்தான் கும்பல் பாகிஸ்தானில் குடி ஏர வேண்டியது தானெ. அங்கே வாழ் ஓட்ட நறுக்கிவிடுவார்கள்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
18-மார்-202321:19:35 IST Report Abuse
Sivaraman கேஜரிவால் கடந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அளித்த ஆதரவின் விளைவு தான் நாட்டிற்கு ஏற்பட்டு உள்ள இந்த கேடு . வரும் தேர்தலில் மக்கள் தக்க பதில் கொடுப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X