ரூ.8,000 கோடி: திவாலான வங்கியில் இந்திய ஸ்டார்ட்அப்களின் டெபாசிட்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
அமெரிக்காவில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்புள்ள டெபாசிட்களை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வைத்துள்ளன என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.அமெரிக்காவின் டெக் மாகாணம் எனப்படும் கலிபோர்னியாவில் சிலிக்கான் வேலி வங்கி (SVB) செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம்
SVB, Startups, Silicon_Valley_Bank, சிலிக்கான்வேலிவங்கி, ஐடிஅமைச்சர்

அமெரிக்காவில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்புள்ள டெபாசிட்களை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வைத்துள்ளன என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் டெக் மாகாணம் எனப்படும் கலிபோர்னியாவில் சிலிக்கான் வேலி வங்கி (SVB) செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பெரும்பாலும் ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்களுக்கு கடனளித்தது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால் இந்நிறுவனம் யு.எஸ்., டிரஷரீஸ் மற்றும் மார்ட்கேஜ் ஆதரவு கொண்ட பத்திரங்களில் செய்திருந்த முதலீடுகள் பல ஆயிரம் கோடி சரிவைக் கண்டது. மக்கள் அந்த சமயத்தில் ஒரே நாளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட்டுகளை திரும்பப் பெறத் தொடங்கினர். இதனால் முதலீடுகளை நஷ்டத்தில் விற்று பணத்தை திரட்டியது. வங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. பங்குச்சந்தையில் இவ்வங்கியின் பங்குகள் ஒரே நாளில் 70% சரிந்தன. கலிபோர்னியா வங்கி கட்டுப்பாட்டாளர்கள் மார்ச் 10 அன்று சிலிக்கான் வேலி வங்கியை (SVB) மூடிவிட்டனர்.


latest tamil news

இந்நிலையில் மத்திய ஐடி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு உரையாடலில் எஸ்.வி.பி., குறித்து பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சமீப ஆண்டுகளில் பல ஸ்டார்ட்அப்கள் பில்லியன் கணக்கான டாலர் வேல்யூவேஷனை பெற்றுள்ளன. இந்நிலையில் நூற்றுக்கணக்கான இந்திய ஸ்டார்ட்அப்கள் எஸ்.வி.பி.யில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான நிதியை வைத்துள்ளன.

இந்த வாரம் 460-க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்தோரை சந்தித்தேன். அதில் எஸ்.வி.பி., மூடலால் பாதிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களும் அடங்கும். அவர்களின் பரிந்துரைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்துள்ளேன். எஸ்.வி.பி.,யில் அவர்கள் வைத்துள்ள டெபாசிட்டுகளை பிணையமாகப் பயன்படுத்தி கடன் வழங்கலாம் என்பதும் அதில் ஒன்று. சிக்கலான எல்லைக் கடந்த அமெரிக்க வங்கி முறையைச் சார்ந்து இருப்பதை விட, இந்திய வங்கி முறைக்கு ஸ்டார்ட்அப்களை எவ்வாறு மாற்றுவது என திட்டமிடுகிறோம். இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

18-மார்-202322:18:46 IST Report Abuse
ஆரூர் ரங் தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் கடன்களை பற்றி வெளியிடக்கூடாது என்பது வங்கி சட்டம். துறை வாரியாக அனைத்து நிறுவனங்களது மொத்தக் கடன் அளவை வெளியிடுவது சட்டத்திற்கு உட்பட்டே.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
18-மார்-202321:25:14 IST Report Abuse
Priyan Vadanad இதை வெளிப்படுத்தலாம். ஆனால் அதானி பற்றி எதுவும் சொல்லக்கூடாது. ரகசியம்.
Rate this:
Cancel
Sun mohan -  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-202320:50:09 IST Report Abuse
Sun mohan When the bank is going to loss, The bank money must stop to release. some days
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X