வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:டில்லியில் நடந்த உலக சிறு தானியங்கள் மாநாட்டில், கோவையைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாளிடம், பிரதமர் மோடி ஆசிர்வாதம் பெற்றார்.

சர்வதேச சிறுதானியங்களின் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த பாப்பம்மாள் கலந்து கொண்டார்.

இதையடுத்து, பாப்பம்மாள் பாட்டி பாரதப் பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் அவரிடம் ஆசி பெற்றார்.