கொடைக்கானல்:வார விடுமுறையடுத்து நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
தரைப் பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு நகரான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
வார விடுமுறையால் நேற்று ஏராளமானோர் கொடைக்கானலில் முகாமிட்டனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம், பசுமை பள்ளத்தாக்கு, செட்டியார் பூங்காவை பார்த்து ரசித்தனர்.
மதியத்திற்கு பின் ஏராளமான பயணிகள் படகு, ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மட்டும் நீடித்தது. அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டத்தை ரசித்தனர்.