அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவருக்கும் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ரம்யா, 28, விற்கும், 2016 ல் திருமணம் நடந்தது.
கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மாரியப்பன், மாமியார் விஜயராணி, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதாக ரம்யா மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் கணவர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.