ராமேஸ்வரம் கடலில் 5. 30 கோடி இறால் குஞ்சுகள்; எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தடுக்கும் முயற்சி

Added : மார் 19, 2023 | |
Advertisement
ராமேஸ்வரம், மார்ச் 19-- ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் 5.3 கோடி பச்சை வரிஇறால் குஞ்சுகளை விட்டு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையவிஞ்ஞானிகள் சாதித்தனர்.பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகள் பச்சை வரி இறால் குஞ்சுகளை வளர்த்து மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடலில்
ராமேஸ்வரம் கடலில் 5. 30 கோடி இறால் குஞ்சுகள்;    எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தடுக்கும் முயற்சி

ராமேஸ்வரம், மார்ச் 19-- ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் 5.3 கோடி பச்சை வரிஇறால் குஞ்சுகளை விட்டு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையவிஞ்ஞானிகள் சாதித்தனர்.

பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானிகள் பச்சை வரி இறால் குஞ்சுகளை வளர்த்து மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடலில் விடுகின்றனர்.

அதன்படி நேற்று தலைமை விஞ்ஞானி தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் ஆகியோர் மண்டபம் முனைக்காடு கடலில் மீனவர்கள் மூலம் படகில் சென்று 10.20 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகளை விட்டனர்.

இந்த இறால் குஞ்சுகள் 3 முதல் 4 மாதங்களில் 100 முதல் 150 கிராம் வரை வளர்ந்து மீனவர் வலையில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கடல் பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் ராமேஸ்வரம் மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதை தடுக்கலாம்.

மேலும், இறால் மீன்பிடிப்பால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 2022 பிப்., முதல் தற்போது வரை 5.30 கோடி இறால் குஞ்சுகளை ராமேஸ்வரம், மண்டபம் கடலில் விட்டுஉள்ளதாக, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X