சகிப்புத்தன்மை இல்லை

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் ரவிக்கும், தி.மு.க.,விற்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசு எப்படி செயல்படுகிறது, அது அனுப்பிய சில மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என அனைத்து விஷயங்களையும் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்து வருகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: தமிழக கவர்னர் ரவிக்கும், தி.மு.க.,விற்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.



latest tamil news


தமிழக அரசு எப்படி செயல்படுகிறது, அது அனுப்பிய சில மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என அனைத்து விஷயங்களையும் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்து வருகிறார் கவர்னர் ரவி.

சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும் போது, 'கவர்னரின் செயல்பாடுகளைப் பார்த்தால், அவருக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் கிடையாது' என்றார். அவருடைய இந்தப் பேச்சு, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் வெளியானது.


latest tamil news


கவர்னர் ரவி உடனே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பினாராம். தி.மு.க., தலைவர்கள் தன்னைப் பற்றி அவதுாறாக பேசி வருகின்றனர் என்றும் அவர் கடிதம் எழுதினாராம்.

'கவர்னருக்கு எதிராக கட்டுரைகள் வந்தால் இதை கவர்னர் பொறுத்துக் கொள்வதில்லை; அவருக்கு சகிப்புத்தன்மை இல்லை; இந்த லோக்கல் விஷயங்களை அவரே சமாளித்தாக வேண்டும்' என, சில சீனியர் பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

DVRR - Kolkata,இந்தியா
19-மார்-202318:47:39 IST Report Abuse
DVRR கவர்னர் செய்வது மிக மிக தவறானது இந்த மாதிரி மாநில அரசு கேவலமானமுறையில் நடந்து கொண்ட உடனே அந்த அரசை நீக்கவேண்டும் என்று அவர் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு ஒரு உத்தரவு அனுப்பி அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும் அதை விட்டு விட்டு இப்படி அமைதியாக இருக்கக்கூடாது.
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
19-மார்-202318:26:01 IST Report Abuse
velan வெளிப்படையாக தெரியும் யார் பிரச்சினை என்று ... மக்களுக்கு தெரியும் எனவே இதில் கருது கூற வேண்டியதில்லை எல்லாம் இயற்கை நியதியின் படி சமன் ஆகும் ...
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-மார்-202313:23:53 IST Report Abuse
g.s,rajan தலை உண்டு ,மூளை இல்லை அது என்ன....???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X