ராமேஸ்வரம், : ராமேஸ்வரத்தில் கடற்கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகு இஞ்சினில் சமூக விரோதிகள் சிலர் சீனியை போட்டு பழுது ஏற்படுத்தினர்.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் நாட்டுப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.
இதில் 3 படகுகளில் உள்ள இஞ்சின் டீசல் டாங்கில் சீனி, பிளாஸ்டிக் கழிவுகளை சமூக விரோதிகள் சிலர் போட்டுள்ளனர். இதனால் இஞ்சினை இயக்க முடியாமல் பழுதாகியது.
இதுகுறித்து மீனவர் மாரீஸ் ராமேஸ்வரம் துறைமுகம் போலீசில் புகார் அளித்தார். இருந்தும் சமூக விரோதிகளை போலீசார் கைது செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம், என சேராங்கோட்டை மீனவர்கள் தெரிவித்தனர்.