படகு இன்ஜினில் சர்க்கரை போட்டதால் பழுது

Added : மார் 19, 2023 | |
Advertisement
ராமேஸ்வரம், : ராமேஸ்வரத்தில் கடற்கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகு இஞ்சினில் சமூக விரோதிகள் சிலர் சீனியை போட்டு பழுது ஏற்படுத்தினர்.ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் நாட்டுப்படகுகளை நிறுத்தி உள்ளனர். இதில் 3 படகுகளில் உள்ள இஞ்சின் டீசல் டாங்கில் சீனி, பிளாஸ்டிக்



ராமேஸ்வரம், : ராமேஸ்வரத்தில் கடற்கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகு இஞ்சினில் சமூக விரோதிகள் சிலர் சீனியை போட்டு பழுது ஏற்படுத்தினர்.

ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் நாட்டுப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.

இதில் 3 படகுகளில் உள்ள இஞ்சின் டீசல் டாங்கில் சீனி, பிளாஸ்டிக் கழிவுகளை சமூக விரோதிகள் சிலர் போட்டுள்ளனர். இதனால் இஞ்சினை இயக்க முடியாமல் பழுதாகியது.

இதுகுறித்து மீனவர் மாரீஸ் ராமேஸ்வரம் துறைமுகம் போலீசில் புகார் அளித்தார். இருந்தும் சமூக விரோதிகளை போலீசார் கைது செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம், என சேராங்கோட்டை மீனவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X