'பாக்.,குடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தவில்லை'

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
இஸ்லாமாபாத்-''பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவை, இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை,'' என, பாகிஸ்தானுக்கான நம் நாட்டின் துணை உயர் கமிஷனர் சுரேஷ் குமார் தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:பாகிஸ்தானுடன், இந்தியா எப்போதும் சிறந்த உறவையே விரும்புகிறது. எங்களுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திய போதும் கூட, நாங்கள் வர்த்தகத்தை நிறுத்தவில்லை.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்-''பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவை, இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை,'' என, பாகிஸ்தானுக்கான நம் நாட்டின் துணை உயர் கமிஷனர் சுரேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தானுடன், இந்தியா எப்போதும் சிறந்த உறவையே விரும்புகிறது.

எங்களுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திய போதும் கூட, நாங்கள் வர்த்தகத்தை நிறுத்தவில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.


latest tamil news


ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேருக்கு 'விசா' வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ மற்றும் விளையாட்டு விசாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப் போகிறது. இது, சேவைத் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

M Ramachandran - Chennai,இந்தியா
19-மார்-202319:48:30 IST Report Abuse
M  Ramachandran பாகிஸ்தானிடம் பணமில்லையய பிறகு எப்படி வர்த்தகம் செய்ய இயலும் . வெறுங்கையால் மூளம் போட முடியாது .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-மார்-202316:54:17 IST Report Abuse
மலரின் மகள் பிராந்தியங்களில் விளைவிக்கப்படும் மற்றும் மனித உழைப்பால் உருவாகும் அனைத்தையும் நாட்டின் பிறபகுதிகளுக்கு அரசு சலுகை விலையில் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்து அங்கிருந்து பொருட்கள் பாகிஸ்தான் வியாபாரிகளுடன் செய்கின்ற வர்த்தகத்தை முற்றிலும் நிறுத்தவேண்டும். அங்குள்ள காஸ்மீரிகள் வெகு விரைவில் இந்தியாவுடன் இணைந்து விட முயற்சித்து அது திருவினையாவது நடக்கும். முழுவதும் இயல்பாக இந்தியாவுடன் இணைந்து விட முயற்சிகளை மாற்றுவலிகளிலும் செய்யலாம்.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
19-மார்-202313:21:07 IST Report Abuse
nizamudin நல்ல செய்தி வாழ்த்துவோம் வளரட்டும் வர்த்தகம் மலரட்டும் உறவுகள் /சீனா வை கட்டுப்படுத்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X