பரமக்குடி முத்தாலம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்காரம்

Added : மார் 19, 2023 | |
Advertisement
பரமக்குடி, : பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 'சக்தி' கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர்.பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் பூத்தட்டுகளை வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் ஒவ்வொரு
 பரமக்குடி முத்தாலம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்காரம்



பரமக்குடி, : பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 'சக்தி' கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர்.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் பூத்தட்டுகளை வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் 50 க்கும் மேற்பட்ட பூத்தட்டுகள் புறப்படாகின. அனைத்து பூத்தட்டுக்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயிலை அடைந்தது.

பின், நள்ளிரவு 1:00 மணி முதல் விடிய, விடிய பக்தர்கள் செலுத்திய 3 டன்பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மலர் கிரீடம் சூட்டி மூலஸ்தானம் துவங்கி, படிக்கட்டுகள் வரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

மேலும் கோயிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அனைத்து பூக்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மார்ச் 28 காலை முத்தாலம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் பங்குனி விழா துவங்குகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X