புதுக்கோட்டை : 'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும், பல்வேறு போராட்டங்களை நடத்தப்படும்,' என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரித்துள்ளது.
புதுக்கோட்டையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி, பழைய முறைப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தபடி, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்குவதாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.
தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையை திட்டத்தை ஆதரிக்கிறதா; எதிர்க்கிறதா என்பதை விளக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 30 மாதத்துக்கான அகவிலைப்படியை உடனடியாக விடுவிக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement