சேலம்: சேலம், சிவதாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளி பட்டறை அதிபர் அனந்தகிருஷ்ணன், 28. இவரது பட்டறையில் பணிபுரிந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அனந்தகிருஷ்ணன் நெருங்கி பழகினார். அத்துடன் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
இப்புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார், கடந்த, 7ல் அனந்தகிருஷ்ணன் மீது, 'போக்சோ' பிரிவில் வழக்குப்பதிந்தனர். அவர் தலைமறைவானார். இந்நிலையில், சிறுமியிடம் நடந்த விசாரணையில் அவரிடம், வளர்ப்பு தந்தை சதீஷ், 33, என்பவரும், பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதையடுத்து, போக்சோ வழக்கில் சதீைஷ, நேற்று போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தாய், கணவரை பிரிந்து சதிஷூடன் குடும்பம் நடத்தும் நிலையில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Advertisement