1,212 மது பாட்டில் பறிமுதல் வாலிபர் இருவர் கைது

Added : மார் 19, 2023 | |
Advertisement
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீசார், சத்தியமங்கலம் -- கோவை சாலையில் வாரச்சந்தை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த அட்டை பெட்டிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது ராமநாதபுரம் மாவட்டம்


பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீசார், சத்தியமங்கலம் -- கோவை சாலையில் வாரச்சந்தை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த அட்டை பெட்டிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து, 45, கோவை மாவட்டம்
அன்னுாரை சேர்ந்த நாராயணன், 36, என தெரியவந்தது.
இவர்கள் இருவரும் அன்னுாரில் நடத்திவரும் ரெஸ்டாரன்டுக்கு டாஸ்மாக் மதுபானங்களை வாங்கிச் சென்று அங்கு கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, சத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 180 மில்லி லிட்டர் அளவுள்ள, 1,056 பாட்டில்களும், 375 மில்லி லிட்டர் அளவுள்ள, 96 பாட்டில்களும், 650 மில்லி லிட்டர் அளவுள்ள, 60 பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X