அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.,யின் முதலீடு குறித்து பாலிசிதாரர்களோ பங்குதாரர்களோ பயப்பட தேவையில்லை. அது கடலில் ஒரு துளி போன்றது என எல்.ஐ.சி., தலைவர் குமார் கூறினார்.
உச்சத்தில் இருந்த அதானி குழுமப் பங்குகள் ஜனவரி இறுதியில் இருந்து கடும் சரிவைச் சந்தித்தன. அக்குழுமம் பற்றி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் எதிர்மறையான செய்தி வெளியிட்டது. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழுமப் பங்குகளை விற்று வெளியேறினர். அப்போது எல்.ஐ.சி., அதானி குழுமத்தில் முதலீடு செய்து நஷ்டமடைந்ததாக புரளி கிளம்பியது. எல்.ஐ.சி., மிக மிகக் குறைந்த விலையில் அதானி குழுமப் பங்குகளை வாங்கி பெருத்த லாபம் பார்த்துள்ளது. தற்போதும் நஷ்டமின்றி போர்ட்போலியோவை நிர்வகித்துள்ளது.
![]()
|
அதானி குழுமத்தில் உள்ள எல்.ஐ.சி.,யின் பணம் பற்றி பங்குதாரர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் 1 சதவீதம் கூட ஆபத்து இல்லை. அது ஒரு பெரிய விஷயமில்லை. இது கடலில் ஒரு துளி போன்றது. இவ்வாறு கூறினார்.
Advertisement