திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
பேரூராட்சி பகுதிகளில், வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை, பேரூராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது.
நடப்பாண்டில், பலர் வரிகளை செலுத்தாமல், ஏராளமான தொகையை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரி பாக்கியை, வரும் 31ம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு, பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துஉள்ளது.
இதற்காக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தி, வரியினங்களை செலுத்த வேண்டும் என, அறிவிப்பு செய்து வருகிறது.