புதுக்கோட்டை : கந்தர்வக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில், இன்ஸ்பெக்டர் உட்பட, 40 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே ராஜாப்பட்டி கருப்பர் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 660 காளைகள், வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு, 190 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
போட்டியில், காளைகள் முட்டியதில் ஆவுடையார்கோவில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.