தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகளை கவ்விய பருந்து

Added : மார் 20, 2023 | |
Advertisement
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் வனத்துறையினர் விட்ட 335 ஆமை குஞ்சுகளில் சிலவற்றை செம்பருந்துகள் கவ்வி சென்றன.மன்னார் வளைகுடா கடலில் வாழும் அலுங்காமை, சித்தாமை, தோணி ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் முகுந்தராயர் சத்திரம் வரை முகாமிடும். இங்குள்ள கடற்கரையில் ஆமைகள் மணலில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும்.
hawk,baby turtles,Dhanushkodi

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் வனத்துறையினர் விட்ட 335 ஆமை குஞ்சுகளில் சிலவற்றை செம்பருந்துகள் கவ்வி சென்றன.

மன்னார் வளைகுடா கடலில் வாழும் அலுங்காமை, சித்தாமை, தோணி ஆமைகள் இனப்பெருக்கத்திற்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் முகுந்தராயர் சத்திரம் வரை முகாமிடும். இங்குள்ள கடற்கரையில் ஆமைகள் மணலில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். இதனை வனத்துறையினர் சேகரித்து முகுந்தராயர்

சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு வேலிக்குள் முட்டைகளை மணலில் புதைத்த பின் 50 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சுகள் குழியில் இருந்து வெளியேறும்.

அதன்படி 5 குழிகளில் இருந்த 624 முட்டைகளில் நேற்று 335 ஆமை குஞ்சுகள் பொரித்து வெளியே வந்தன. இதனை மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வேட்டை தடுப்பு காவலர்கள் சேகரித்து தனுஷ்கோடி கடலில் விட்டனர்.

அப்போது வானில் வட்டமடித்த செம்பருந்துகள் சில குஞ்சுகளை லாவகமாக கவ்வி சென்றன. சுதாரித்த வனத்துறையினர் அவை மேலும் தூக்கி செல்லாதபடி சத்தமிட்டனர்.

இதுவரை 127 ஆமைகள் இட்டு சென்ற 14,020 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.

இதில் 20 குழியில் பொரித்த 2143 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X