கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் மாகாளியம்மன் திருவிழா துவங்கி நடந்து வருகிறது.
கோத்தகிரி திம்பட்டி கிராமத்தில், 12ம் தேதி மாகாளியம்மன் திருவிழா துவங்கி, சுற்றுவட்டார கிராமங்களில், 10 நாட்களாக நடந்து வருகிறது.
அதில், அளியூர், கடக்கோடு, அறையட்டி, சாமில்திட்டு, அணையட்டி, கம்பட்டி,, கப்பட்டி, நாரகிரி, குனியட்டி, கன்னேரிமுக்கு மற்றும் கடக்கோடு கிராமங்களில் அம்மன் திருவீதி விழா நடந்து வருகிறது.
நேற்று, கோத்தகிரி கட்டபெட்டு, நடுஹட்டி, இளித்துரை, எடப்பள்ளி மற்றும் அளக்கரை உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
21ல் திம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் விழா நிறைவடைகிறது. அன்று, பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று, அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடி அம்மனை வழிபட உள்ளனர்.
Advertisement