பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கணவனை தாக்கி கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனுார், லட்சுமி கோவில் வீதியில் வசித்தவர் செல்வராஜ், 60; மனைவி கலாமணி, 55. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு, மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலாமணி, செல்வராஜை கல்லால் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த நிலையில், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக, பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார், செல்வராஜ் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். கலாமணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.