'ஹீரோயிசம்' வேண்டாம் சீமான்!

Added : மார் 20, 2023 | கருத்துகள் (48) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: அரசியல் தலைவர்கள் பலருக்கு, ஒரு வித பழக்கம் உண்டு... தாங்கள் பேசும் கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் கூடியிருந்தால், உடனே குஷியாகி விடுவர். பொதுமக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக என்னவெல்லாமோ பேசுவர்; முடியாத விஷயத்தையும், முடித்து
No heroism Seeman!  'ஹீரோயிசம்' வேண்டாம் சீமான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: அரசியல் தலைவர்கள் பலருக்கு, ஒரு வித பழக்கம் உண்டு... தாங்கள் பேசும் கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவில் கூடியிருந்தால், உடனே குஷியாகி விடுவர். பொதுமக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக என்னவெல்லாமோ பேசுவர்; முடியாத விஷயத்தையும், முடித்து விடுவது போல வாயால் வடை சுடுவர்.


கடந்த, 1962ல், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 'வடவர்கள் நம்மவர்கள் அல்ல; அவர்கள் நல்லவர்கள் அல்ல; அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு' என்று பேசினார். ஆனால், ராஜ்யசபா எம்.பி.,யாகி, பார்லிமென்டில் போய் அமர்ந்ததும், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.


அதேபோல, எம்.ஜி.ஆர்., ஒரு முறை, 'மாநில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்' என்றார்; பின், அதை மாற்றிக் கொண்டார். இதெல்லாம், கூட்டத்தை பார்த்தவுடன், அவர்களுக்கு ஏற்பட்ட 'அலர்ஜி'யால் பேசியதாகும். ஆனால், ராஜாஜி, ஈ.வெ.ரா., காமராஜர் போன்ற முதிர்ந்த தலைவர்கள், இப்படி ஒருபோதும் பேசியதில்லை; என்றும், எங்கும் ஒரே பேச்சு தான்.


latest tamil news

இப்போது தமிழகத்தில், 'மைக் தலைவர்' என, சிலரால் செல்லமாக அழைக்கப்படும், நாம் தமிழர் கட்சி சீமானும், கூட்டத்தை பார்த்தவுடன் மிரண்டு போய், என்னன்னவோ பேசுகிறார். வட மாநிலத்தவரை வேலைக்கு வைப்பது தவறு என்று குதிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்; நிறைய சம்பாதிக்கின்றனர்.


அப்படி இருக்கையில், ஏழை வடமாநில தொழிலாளர்கள் இங்கு வந்தால் பாவமா? வடமாநிலத்தவர்குறைந்த சம்பளம், நீண்ட நேரம் வேலை என்றாலும், சந்தோஷமாக ஏற்று பணியாற்றுகின்றனர்; அதை ஏன் கெடுக்க வேண்டும்.


திரைப்படத் தொழிலில் எத்தனையோ வடமாநிலத்தவர் நடிகர் - நடிகையராக, நடன இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சீமான் எதிர்ப்புத் தெரிவிப்பாரா? நமக்கு துபாயில், அமெரிக்காவில்அதிக சம்பளம்; வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் அதிக சம்பளம்... அவ்வளவு தான்.


சீமான் போன்றவர்களின் பேச்சை, பெரிய நடிகர்கள் கண்டிக்க வேண்டும். ஒரு பக்கம், 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்று கூறி விட்டு, மறுபக்கம் ஏழைத் தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது எப்படி நியாயமாகும். எனவே, வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில், 'ஹீரோயிசம்' காட்டுவதை, சீமான் கைவிட வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48)

Priyan Vadanad - Madurai,இந்தியா
21-மார்-202300:25:36 IST Report Abuse
Priyan Vadanad தியேட்டர் காத்து வாங்குது. கூட்டமே இல்ல.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-மார்-202320:00:08 IST Report Abuse
Rajagopal சீமானுக்கு இருக்கும் கவலை, இந்த வட இந்தியர்கள் தென்னாட்டில் இருக்கும் சட்டம், ஒழுங்கு, தரம் போன்றவற்றைப் பார்த்து ஈர்க்கப்பட்டு தமிழகத்தில் நிரந்தரமாக தங்கி விட்டால், ஒரு தலைமுறையில் நாம் தமிழர், வந்தேறிகள் வெளியேறவேண்டும் என்று மக்களை ஏமாற்றி பதவிக்கு வர முடியாது. ஓட்டு சதவீதம் மாறி விடும். தவிர நிறைய ரங்கராஜ் பாண்டேக்கள் உருவாகி, தமிழைக் கசடறக் கற்று , திராவிட மாயையில் சிக்கி மதியிழந்து போன தமிழர்களை விட அதிகம் தமிழில் வளம் கண்டு விட்டால், தமிழ் அழிகிறது என்கிற பொய்யை சொல்லி, வீர வசனங்கள் பேசி, மக்களை பிளவு படுத்தி அரசியலில் ஆதாயம் காண முடியாது. தனி தமிழ் தேசம் உருவாக்க முடியாது. அதனால் இப்படி கதறுகிறார். உண்மையான தமிழன் என்று எவனும் கிடையாது. அனைவரும் வந்தேறிகள். தமிழை ஏற்று, அதன் அருமையை உணர்ந்து, அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்து, தனது தாயைப்போல வணங்குபவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்களது முன்னோர்கள் அனைவரும் வாழ்வு தேடி தமிழகம் வந்து, தமிழரானவர்கள். கருணாநிதி ஊழலின் அடையாளமாக இருந்தாலும், அவரிடமிருந்து கொட்டியது தமிழ் வெள்ளம். அண்ணாதுரை தெலுங்கராக இருந்தாலும், அவர் பேசிய தமிழ் செந்தமிழ். வைகோ தெலுங்கராக இருந்தாலும், அவர் பாடுபட்டது ஈழத்தமிழரின் உரிமைக்காக. உ வே சாமிநாத அய்யர் தமிழ் கொடுத்த தாத்தா. டி எம் சௌந்தர ராஜன் சௌராஷ்டிராவிலிருந்து வந்து குடியேறியவர்களின் பரம்பரையில் வந்தவர். பி சுசீலாவின் குரல் வளத்திற்கு ஈடே கிடையாது. ஆனால் அவர் ஆந்திராக்காரர். சர் சி வி ராமன் நோபல் பரிசு வாங்கிய தமிழர். சுப்பிரமணி பாரதி பெண்ணுரிமை கேட்ட முதல் தமிழர். இவர்களெல்லாம் வளர்க்காத தமிழ் என்றோ அழிந்திருக்கும். பெரியார் போன்ற திராவிட வாதிகள் தமிழை அழிக்க முயன்றார்கள். தமிழ் காட்டு மிராண்டி பாஷை என்று சொன்னவனை இந்த மூர்க்கர்கள் கொண்டாடுகிறார்கள். ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருப்போம் என்று சொன்னவனை சீமான் ஏற்கிறான். திருமாவளவன் கொண்டாடுகிறான். இவர்கள் தமிழர்கள் அல்ல. தமிழை அழிக்க வந்தவர்கள். தங்களுக்கு ஆதாயம் தேடுபவர்கள். இவர்கள் அதிகாரமும், செல்வாக்கும் மறைந்தாலே தமிழ் வாழும். வளரும். இது நாலாயிரம் பாடிய பெரியாழ்வார் மண். தேவாரம் இயற்றிய சான்றோர் நடந்து சென்ற மண். கம்பர், வள்ளுவர், அவ்வையார், சீத்தலை சாத்தனார் போன்ற மகான்கள் வாழ்ந்த மண். தமிழைக் கற்று அதை வளர்ப்பவர்கள் எப்போதும் தேவை. மற்றவர்கள் கடலோடு போகட்டும்.
Rate this:
Cancel
கல்யாணராமன்   மறைமலை நகர் சரிப்பா, வட இந்தியன் வந்தேறி, விரட்டிடுவோம். இன்று தமிழக இளைஞர்கள் எத்தனை பேர் உடல் உழைப்புக்கு தயாராக உள்ளனர்? டாஸ்மாக்கே கதி என்று கிடக்கிறார்கள். கடை திறக்குமுன்பே வாசலில் காத்துக்கிடப்பதும் ப்ளாக்கிலாவது வாங்கி குடிப்பதும் தமிழனா வட இந்தியனா? இங்கே சீமான் பேச்சை ஆதரிப்பவர்களுக்கு ஒரு கேள்வி. அவர்கள் ஒரு நிறுவனம் நடத்தினால் வாரத்திற்கு மூன்று நாள் வேலைக்கு வந்துவிட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு போய் குடித்து அழித்துவிட்டு காசு தீர்ந்தவுடன் மறுபடி மூன்று நாள் வேலைக்கு வருபவனை வேலைக்கு வைப்பரா அல்லது குறைந்த ஊதியத்தில் கடுமையாக உழைப்பவனை வேலைக்கு வைப்பரா? மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள். வெளிமாநிலத்தில் வேலை செய்யும் தமிழர்களை இங்கு அழைத்து வந்துவிட்டு இங்குள்ள வடஇந்தியர்களை வெளியேற்றுங்கள். அங்கே ஒழுங்காக வேலை செய்த தமிழன் இங்கே வந்ததும் இங்குள்ளவனோடு சேர்ந்து டாஸ்மாக் தமிழனாகிவிடுவான். மற்றபடி உணர்ச்சி அரசியல் செய்யாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X