போலீஸ் நடவடிக்கையால் பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

Added : மார் 20, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக போலீஸ்துறையின் கடும் நடவடிக்கையால் பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது,'' என ஸ்ரீவில்லிபுத்துாரில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ம் அணி அலுவலகத்தில் நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை மதுரை
Sex crimes on the decline due to police action: DGP Sylendra Babuபோலீஸ் நடவடிக்கையால் பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக போலீஸ்துறையின் கடும் நடவடிக்கையால் பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது,'' என ஸ்ரீவில்லிபுத்துாரில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ம் அணி அலுவலகத்தில் நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை மதுரை கமாண்டண்ட் பாஸ்கர், விருதுநகர் எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள், டி.எஸ்.பி.,க்கள் சபரிநாதன் (ஸ்ரீவில்லிபுத்தூர்) , பிரீத்தா (ராஜபாளையம்) , அலுவலர்கள் வரவேற்றனர். அங்கு மரக்கன்று நட்டு, பயிற்சி போலீசார், போலீசார் குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார்.


latest tamil news

பின்னர் டி.ஜி.பி., கூறியதாவது: தமிழக போலீஸ்துறையின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீஸ் நலனுக்காக முதல்வர் 9 திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் காலை 8:00 மணிக்கு ரோல்கால் துவங்கும் என்ற அறிவிப்பும், மகளிர் போலீசார் விரும்பும் இடத்திற்கு பணி மாறுதலும், போலீஸ் ஸ்டேஷனில் அவர்களுக்கு கூடுதல் வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக போலீசின் கடும் நடவடிக்கையால் தற்போது பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது. எனினும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போதுதான் காலப்போக்கில் போக்சோ குற்றங்கள் முழு அளவில் குறையும் ,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

Raa - Chennai,இந்தியா
20-மார்-202313:15:01 IST Report Abuse
Raa அப்ப இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையா ஆபீசர்?
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-மார்-202312:13:59 IST Report Abuse
Narayanan ஒருவழியாக இப்போதுதான் பாலியல் கொடுமை தமிழகத்தில் நடந்தது என்று ஒத்துக்கொண்டு அது குறைக்கப்பட்டது என்கிறார் . ஸ்டாலின் தனது ஆட்சியில்தான் பெண்கள் பாதுகாப்பு அதிகம் என்றதை பொய்க்க செய்தது நல்லது .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மார்-202311:36:08 IST Report Abuse
Mani . V எல்லோரும் ஜோரா ஒருதரம் கை தட்டுங்க. நான் ஒரு ஜோக் சொல்லப்போறேன். (இன்றைய தினமலரின் மற்றொரு செய்தி - சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரருக்கு 'போக்சோ')
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X