செப்.,15 முதல் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

Updated : மார் 20, 2023 | Added : மார் 20, 2023 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை: வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இத்தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.இன்று (மார்ச் 20) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு 'மகளிருக்கான
Rs 1000 stipend for women from Sep 15: Finance Minister notification  செப்.,15 முதல் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இத்தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.



இன்று (மார்ச் 20) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு 'மகளிருக்கான உரிமைத்தொகை' மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இது குறித்து நிதியமைச்சர் தெரிவிக்கையில், 'முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்.,15ம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு. மகளிருக்கான உரிமைத் தொகை பெறும் வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்' என அறிவித்தார்.



latest tamil news


பட்ஜெட்டில் இடம்பெற்ற பிற முக்கிய அறிவிப்புகள்


* தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.8,056 கோடி ஒதுக்கீடு


* மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு


* மாணவர்கள் இலவச பேருந்து பயண மானியத்துக்கு ரூ.1,500 கோடி, டீசல் மானியத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.


* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.


* ரூ.77 ஆயிரம் கோடியில் 16,500 மெகாவாட் மின் திறன் கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


* காற்றாலைகளின் செயல் திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை வகுக்கப்படும்.




இலவச வை-பை


* மின் தரவுகளை தானியங்கி முறையில் பெற அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும்.


* கைத்தறி மேம்பாட்டுக்கு ரூ.20 கோடியில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் நிறுவப்படும்.


* தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளில் பொதுவெளியில் இலவச வை-பை சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட 4 நகரங்களில் ரூ.410 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.


* புதிதாக ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 32 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தோல் அல்லாத காலணி உருவாக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.



latest tamil news


மசூதி, தேவாலயம் சீரமைப்பு


* நாகூர் தர்காவை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு


* சேலம், மதுரையில் தேவாலயங்களை சீரமைக்க நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.


* சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும்.


* தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, ஓசூர், கோவையில் டெக் சிட்டி அமைக்கப்படும்.




கோயில்கள்


* நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்.


* பழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவை ரூ.480 கோடியில் மேம்படுத்தப்படும்.


* நில நிர்வாகத்தில், நம்பகமான எளிய நில பதிவேற்று முறையை கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது. இதற்காக புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்.


* ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்.


* நிலம் வாங்குபவர்களின் பதிவுக் கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

21-மார்-202307:01:37 IST Report Abuse
பேசும் தமிழன் செப்டம்பர் 15 .....எந்த வருடம் என்று கூறினார்களா இல்லையா ....இல்லை எதுக்கு கேட்கிறேன் என்றால் ....நாங்கள் எந்த ஆண்டு என்று சொன்னோமா என்று கூறுவார்கள் ....இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது அல்லவா...என்று கூறுவார்கள் !!!
Rate this:
Cancel
Raj -  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-202323:24:07 IST Report Abuse
Raj அது என்ன செப்டம்பர் 15 ? ஏற்கெனவே 23 மாதங்கள் ஆட்டய போட்டாச்சு. இன்னும் ஆறு மாதம் தள்ளிப் போடனுமா.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-202322:01:34 IST Report Abuse
g.s,rajan பெண்களுக்கு டாஸ்மாக்கில் மதுவைக் குடிக்க சம உரிமையா ..???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X