தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Updated : மார் 20, 2023 | Added : மார் 20, 2023 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில் மகளிர் உரிமைத்தொகை, கல்வி, மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயம், நகை, மகளிர் சுய உதவிக்குழு ஆகியவற்றின் கடன் தள்ளுபடி, சாலை கட்டமைப்பு போன்றவைகள் குறித்து பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய
What are the major announcements announced in Tamil Nadu Budget?  தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில் மகளிர் உரிமைத்தொகை, கல்வி, மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயம், நகை, மகளிர் சுய உதவிக்குழு ஆகியவற்றின் கடன் தள்ளுபடி, சாலை கட்டமைப்பு போன்றவைகள் குறித்து பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.




பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:


* 'மகளிருக்கான உரிமைத்தொகை' மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.,15ல் துவக்கம்


* 'மகளிருக்கான உரிமைத்தொகை' திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு


* கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.


* மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.


* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.


* தமிழ் மொழியில் அதிகளவில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்.



அருங்காட்சியகம்


* சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.


* இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் கட்ட ரூ.233 கோடி ஒதுக்கீடு.


* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும்.


* மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு


* அரசு பள்ளிகளில் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.


* முதல்வரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.



latest tamil news



கடன் தள்ளுபடி


* பொது விநியோக திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.


* மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.


* விவசாயக கடன் தள்ளுபடிக்கு ரூ. 2,393 கோடி ஒதுக்கீடு


* நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.


* கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.


* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு


* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு ரூ.7,145 கோடியில் செயல்படுத்தப்படும்.


* கோவையில் செம்மொழிப் பூங்கா ரூ.172 கோடியில் நிறுவப்படும்.


* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு ரூ.22,562 கோடி ஒதுக்கீடு.



latest tamil news

* சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.


* 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு


* தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.8,056 கோடி ஒதுக்கீடு


* 7 மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இலவச வை-பை சேவை


* விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட 4 நகரங்களில் ரூ.410 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.


* சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.880 கோடியில் ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும்.


* வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்.


* ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்.


* நிலம் வாங்குபவர்களின் பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.



திருக்குறளில் துவக்கி சிலப்பதிகாரத்தில் முடித்தார்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,


''கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி''


- என்னும் திருக்குறளை சொல்லி உரையை துவக்கினார். இதன் பொருள்: நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களை பேணிக்காப்பதே ஒரு அரசுக்கு புகழ் சேர்ப்பதாகும்.


அதேபோல், தனது உரையின் முடிவில், சிலப்பதிகாரத்தில் உள்ள மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவை பகுதியில் இடம்பெற்ற,


''கயல் எழுதிய இமய நெற்றியின்

அயல் எழுதிய புலியும் வில்லும்..''

- என்ற வரிகளை சொல்லி முடித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
20-மார்-202322:18:18 IST Report Abuse
Matt P மகளிருக்கான உரிமை தொகை திட்டத்திற்கு ஏழாயிரம் கோடி ..இந்த ஏழாயிரம் கோடியை சாலை வசதி நல்ல பேருந்துகள், பள்ளிகளில் கழிப்பறை வசதி தரமான பள்ளிக்கூடங்கள் இப்படி மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையும்படி செய்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகி விடாதா? மகளிருக்கு மட்டும் என்ன உரிமை தொகை? தமிழ்நாட்டில் பிறந்து வளர்கின்ற அத்தனை மக்களும் உரிமைகளை பெற வேண்டியவர்கள் தானே. பெண்களும் சுய தொழில் செய்து, பணிகளுக்கு சென்று ஆண்களுக்கு நிகர் என்று ஆகி விட்டார்களே. அதுவும் இந்த ஏழாயிரம் கோடி எத்தனை ஆண்டுகளுக்கு பெண்களுக்கு செலவு செயும்படியாக வரும். அடுத்து வரும் ஆட்சியிலும் இன்னொரு ஏழாயிரம் கோட்டியை தேடி கொண்டே இருக்க வேண்டுமே.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-202322:17:11 IST Report Abuse
g.s,rajan அட நிதி ஒதுக்கறது.திட்டங்கள் ,தள்ளுபடி ,இலவசம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் , இதுக்கெல்லாம் முக்கியமா வைட்டமின் "ப" கொஞ்சமாவது இருக்கா...???
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
21-மார்-202317:57:10 IST Report Abuse
Matt Pபணத்தை பற்றி சிந்திப்பதற்கு இவர்கள் காமராஜரா? கக்கன்ஆ? நிதி அமைச்சர் சி. சுப்ரமணியனா? அன்றைக்கு தொழில் அமைச்சரா இருந்த வேங்கடராமநா? இவர்கள் சுயநலவாதிகள்....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-202320:26:36 IST Report Abuse
g.s,rajan கடன் வாங்குனா அரசாங்கத்துல தள்ளுபடி செய்யறீங்க ,இதுதான் உண்மையிலேயே சூப்பர் திட்டம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X