எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 6வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்

Updated : மார் 20, 2023 | Added : மார் 20, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, பார்லிமென்ட் துவங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும், 6வது நாளான இன்றும் (மார்ச் 20) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடமால், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, பார்லிமென்ட் துவங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும், 6வது நாளான இன்றும் (மார்ச் 20) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.




latest tamil news


இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. அவை நடக்க விடமால், எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து பார்லி., தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதே நேரத்தில் ராகுல் ஜனநாயகம் குறித்து பேசியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை முதல் 5 நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.



latest tamil news


6வது நாளான இன்று (மார்ச் 20) பார்லி., கூடியது. அவை கூடி, சில நிமிடங்களில் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம் குறித்து கோஷமிட்டு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டனர். ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
20-மார்-202321:32:47 IST Report Abuse
MARUTHU PANDIAR அதானியின் பங்குகளை வேண்டுமென்றே ஷார்ட் செல்லிங் செய்தவன் அந்நிய துரோகிகள்+++செயற்கையாக விலை இறக்கி அதில் கொள்ளை லாபம் பார்த்து விட்டான்+++இது தெரிந்தும் திமிர் பிடித்தவர்கள் பார்லியில் ரகளை செய்கிறார்கள்+++அதானி குழுமம் மொத்த ஈக்விட்டி பங்கில் மிக அதிகமாக கிட்ட தட்ட 75% தனது வசமே வைத்திருப்பதால் முதலீட்டாளர் வசம் இருப்பது மிகவும் சொற்பமே.+++ வெளியில் முதலீட்டார்கள் வசம் உள்ள எல் ஆண்டு டி போன்ற எத்தனையோ பல முன்னணி பங்குகள் விலைகள் இது போன்று அதிக உச்சத்திலிருந்து அரை விலைக்கும் கீழ் சரிந்து உள்ளன+++ குறுகிய கால முதலீட்டார் கைகளை கடித்துள்ளன. +++அப்போது இவனுகள் பேசவே இல்லையே?
Rate this:
Cancel
20-மார்-202319:04:36 IST Report Abuse
தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கூட்டத்தொடர் முழுவதையுமே அமளி செய்து அவையை நடத்தவிடாமல் பிஜேபி செய்த செயலை காணவில்லைபோலும்.
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
20-மார்-202317:59:37 IST Report Abuse
Kannan rajagopalan முட்டை போண்டா சாப்பிட தான் பாராளுமன்றம் வருவதாக ஒரு தலைவர் சொன்னார். நிஜமோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X