சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிப்பெற்று, எம்எல்ஏ.,வாக பதவியேற்றார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி மாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கரோனரி தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் நலமுடன் உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.