வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றவாது அணி அமைக்கும் திட்டத்தில் உள்ளார். இதற்காக 7 மாநில முதல்வர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன.
![]()
|
இந்நிலையில் டில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ,பா.ஜ, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்பட 7 மாநில முதல்வர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.