'சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டும் பார்க்கும் காங்., - இடதுசாரி'

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவனந்தபுரம்-''கிறிஸ்துவர்களையும், இதர சிறுபான்மையினரையும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர்,'' என, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் குற்றஞ்சாட்டினார். கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தின் பேராயர் ஜோசப் பாம்பிளானி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, 'ரப்பர் கொள்முதல் விலையை கிலோ 300 ரூபாய் என மத்திய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்-''கிறிஸ்துவர்களையும், இதர சிறுபான்மையினரையும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர்,'' என, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் குற்றஞ்சாட்டினார்.



latest tamil news


கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தின் பேராயர் ஜோசப் பாம்பிளானி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, 'ரப்பர் கொள்முதல் விலையை கிலோ 300 ரூபாய் என மத்திய அரசு உயர்த்தினால், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கேரளாவில் வெற்றி பெற உதவுவோம்' என்றார்.

பேராயரின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ''நான் கத்தோலிக்க தேவாலயம் சார்பாக கருத்து தெரிவிக்கவில்லை; கஷ்டப்படும் விவசாயிகள் சார்பாகவே அப்படி பேசினேன்.

''மத்தியில், பா.ஜ., ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்,'' என ஜோசப் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ''பேராயர் ஜோசபின் பரிந்துரையை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்,'' என, கேரள பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன் உறுதி அளித்தார்.

இது பற்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் நேற்று கூறியதாவது:

பேராயர் ஜோசபின் கருத்துக்கு எதிராக ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன? கிறிஸ்துவர்களுக்கு பா.ஜ., தீண்டத்தகாத கட்சி அல்ல என்பது, அவரது பேச்சு வாயிலாக நிரூபணமாகி உள்ளது.


latest tamil news


காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், கிறிஸ்துவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரை தங்கள் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன.

அவர்கள், மத்திய அரசுக்கு ஆதரவான கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்த இரு கட்சிகளும் சிறுபான்மையினருக்கு ஆதரவானவை என கூறுவது கேலிக்கூத்தானது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

21-மார்-202313:23:34 IST Report Abuse
பேசும் தமிழன் நீங்கள் இரண்டு பேரும் கேரளாவில் அடித்து கொள்வது போல நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறீர்கள் ...நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் !!!
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
21-மார்-202310:10:09 IST Report Abuse
Sivaraman இந்தியாவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று வருவதன் மூலம் மதசார்பின்மை பேசும் கட்சிகளுக்கு. கோடி கோடியாக சம்பாதிக்க நம் ஒட்டு பயன்படுகிறது என்று அவர்களுக்குப் புரிகிறது சிந்தித்து வாக்களிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
21-மார்-202308:35:59 IST Report Abuse
Vijay இந்த அடிமைதனத்தை சிறுபான்மையினர் கூட பெருமையாக நினைக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X