மகிழ்ச்சி நாடுகள் பின்லாந்து முதலிடம்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
நியூயார்க் :உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம், ஆரோக்கியம்,
Finland tops the list of happiest countries  மகிழ்ச்சி நாடுகள்  பின்லாந்து முதலிடம்

நியூயார்க் :உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.


latest tamil news

இந்தப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா, 125வது இடத்தில் உள்ளது. நம் அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம் மற்றும் இலங்கையை விடவும் இந்தியா பின்தங்கி உள்ளது.
தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தான், தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

g.s,rajan - chennai ,இந்தியா
21-மார்-202321:01:30 IST Report Abuse
g.s,rajan இந்தியாவின் நிலை இனி போகப் போக மோசமாகும் என்றே தோன்றுகிறது.....
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
21-மார்-202317:04:42 IST Report Abuse
R Ravikumar மகிழ்ச்சியான நாடு எப்படி என்று மதிப்பீடு செய்கிறார்கள் தெரியவில்லை ... எனக்கு மகிழ்ச்சியான ஊர் / நாடு மாயவரம் மற்றும் கும்பகோணம் தான் . அளவான பணமும் , அமைதியான குடும்பம் உள்ள எல்லா நாடும் மகிழ்ச்சியானது .
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
21-மார்-202316:48:57 IST Report Abuse
Narayanan நாம் சம்பாதிக்கும் பணத்தில் எண்பது சதவிகிதம் பல வழிகளில் அரசு எடுத்துக்கொண்டால் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மீதி இருக்கும் பணத்தில் லஞ்சமாக போகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X