சென்னை - குமரி இரட்டை பாதை டிசம்பரில் நிறைவு

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை-சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை பணிகள், வரும் டிசம்பருக்குள் முடிவடைகின்றன. இதையடுத்து, 'கூடுதலாக ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிப்பதோடு, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் பிரதான ரயில்வே கனவு திட்டமான, சென்னை, எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை பணிகள், வரும் டிசம்பருக்குள் முடிவடைகின்றன. இதையடுத்து, 'கூடுதலாக ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிப்பதோடு, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



latest tamil news


தமிழகத்தில் பிரதான ரயில்வே கனவு திட்டமான, சென்னை, எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, தற்போது மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.


திட்டப் பணிகள் தாமதம்



அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை, 2022ம் ஆண்டு மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால், இந்த திட்டப் பணிகள் தாமதமாகின.

தற்போது, திருநெல்வேலி வரை, இரட்டை பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.


130 கி.மீ., வேகம்



இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டம், இந்த ஆண்டுக்குள் முடிந்து விடும்.


latest tamil news


இதன் மூலம், தென் மாவட்டங்களுக்கு ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிக்க முடியும்.

பெரும்பாலானவை புது ரயில் பாதைகள் என்பதால், 'சிக்னல்'களை மேம்படுத்தினால், தற்போதுள்ள விரைவு ரயில்களை, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

21-மார்-202316:30:32 IST Report Abuse
ஆரூர் ரங் அதிக அளவில் சரக்குப் போக்குவரத்து நடந்தால் மட்டுமே பயணிகள் போக்குவரத்தால் ஏற்படும் 43 சதவீத🤔 நஷ்டத்தை சரிசெய்ய முடியும் . ஸ்டெர்லைட் மாதிரி ஆலைகளை மூடி விட்டு சரக்குப் போக்குவரத்துக்கு வேட்டு வைத்து விட்டு கூடுதலாக பயணிகள் ரயில் சேவை கேட்கலாமா?
Rate this:
Cancel
ramesh - Hosur,இந்தியா
21-மார்-202315:53:23 IST Report Abuse
ramesh பெங்களூர் டு ஓசூர் வழியாக நாகர்கோயிலிக்கு பகல் நேரத்தில் ஒரு ரயில் விடுங்கப்பா
Rate this:
Cancel
21-மார்-202310:12:52 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) பாதை மட்டும் அமைத்தால் போதுமா? ரயில்களை இயக்குவது எப்போது? இப்போது மதுரை வரையில் இரட்டை பாதை முடிந்து பல வருடங்களாகியும் இன்னும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. காரணம், தென்னக ரயில்வே அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள். மேலும், ஆம்னி பேருந்து வருமானம் குறைந்து விடும் என்று இங்கே இருக்கும் அரசியல்வியாதிகளும் கண்டுகொள்வதில்லை. தடுக்கிறார்கள். பிறகு எப்படி மக்களுக்கு பலன் கிடைக்கும்? சரி மோடிஜியாவது இந்த கொள்ளைகளை தடுத்து நிறுத்துவார் என்று பார்த்தால், அவரும் செயல்படுவதாக தெரியவில்லை. எல்லாம் தென் தமிழக மக்களின் சாபக்கேடு.
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
21-மார்-202321:33:12 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaமுதலில் மோடிஜி கு வோட்டை போடுங்கள் பிறகு அவர் ஏன் செய்யவில்லை என்று கேட்க உரிமை இருக்கும். வடகிழக்கு மாநில மக்கள் மோடிஜியின் அருமை தெரிந்து இப்போது முன்னேற்றத்தை பெறுகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X