'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்': நீதிபதி கோபம்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி : திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் ஜோடி, கட்டாயப் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் அளிக்க கோரிய மனுவை, மிகவும் முட்டாள்தனமானது என கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அப்தாப் பூனாவாலா என்ற இளைஞரால் கடந்த ஆண்டு மே
Live-in relationship: Judge rants as stupid  'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்': நீதிபதி கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் ஜோடி, கட்டாயப் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் அளிக்க கோரிய மனுவை, மிகவும் முட்டாள்தனமானது என கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அப்தாப் பூனாவாலா என்ற இளைஞரால் கடந்த ஆண்டு மே மாதம், புதுடில்லியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில், 'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்' எனப்படும், திருமணம் இன்றி சேர்ந்து வாழும் கலாசாரம் தொடர்பாக, வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதில், 'திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடி, கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வழிகாட்டுதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சேர்ந்து வாழும் ஜோடியினருக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, கோரி இருந்தார்.


latest tamil news

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபடி டி.ஒய்.சந்திரசூட் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இது என்ன முட்டாள்தனமான மனு? எதற்கு வேண்டுமானாலும் நீதிமன்றத்தை நாடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டதா? இது போன்ற மனு மீது இனி அபராதம் விதிக்க வேண்டும். திருமணமின்றி சேர்ந்து வாழும் ஜோடி எங்கு சென்று பதிவு செய்து கொள்வர். மத்திய அரசிடமா?


இதில் மத்திய அரசு செய்ய என்ன இருக்கிறது. சேர்ந்து வாழும் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க விரும்புகிறீர்களா அல்லது இதுபோன்ற உறவே கூடாது என்கிறீர்களா? இந்த முட்டாள் தனமான மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

g.s,rajan - chennai ,இந்தியா
21-மார்-202321:23:33 IST Report Abuse
g.s,rajan பகுத்தறிவுப் பாசறையில் இருந்து வந்தவர்கள் இந்தத் தீர்ப்பிற்கு நிச்சயம் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்....
Rate this:
Cancel
Balamurugan - coimbatore,இந்தியா
21-மார்-202318:24:35 IST Report Abuse
Balamurugan நீதிமன்றம் தப்பித்துக்கொள்ள பார்க்கிறது. முடிவை சொல்லாமல் வழக்கு தொடுப்பவரிடமே கேள்வி கேட்பதால் நீதிபதி ஒன்றும் அறிவாளியாகிவிட முடியாது. ஒருவேளை லிவிங் டு கேதரில் குழந்தை பிறந்தால் அப்போது அந்த குழந்தைக்கு பாதுகாப்பு அம்சம் எப்படி உள்ளது என்று நீதிமன்றம் அரசை கேட்டிருக்க வேண்டும்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
27-மார்-202310:44:40 IST Report Abuse
S Ramkumarஇதிலென்ன தப்பிக்க பார்க்கிறது. நீங்கள் ஊதாரித்தனமாக என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் சட்ட பாதுகாப்பு வேணுமா. வேண்டுமானால் உங்கள் பெற்றோரிடம் கேட்டு பாருங்கள். நல்ல பெற்றோராக iruppin செருப்பு பிய்ந்து விடும்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-மார்-202317:09:18 IST Report Abuse
J.V. Iyer ஹா..ஹா.. ஜாடியில் போடுங்கள் பெரிய மூடியை. இதனால்தான் நீதிமன்றங்களின் நேரங்கள் வீணாக்கப்படுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X