தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு :இந்தியாவிடம் பிரிட்டன் அரசு உறுதி
தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு :இந்தியாவிடம் பிரிட்டன் அரசு உறுதி

தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு :இந்தியாவிடம் பிரிட்டன் அரசு உறுதி

Added : மார் 21, 2023 | |
Advertisement
லண்டன் : பிரிட்டனில், இந்தியத் துாதரகத்திற்குள் நுழைந்து, மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்திய சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது.ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்தின் அருகே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
The British government has assured India of maximum security for Dutharaka   தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு :இந்தியாவிடம் பிரிட்டன் அரசு உறுதி



லண்டன் : பிரிட்டனில், இந்தியத் துாதரகத்திற்குள் நுழைந்து, மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்திய சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது.



ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்தின் அருகே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு கொடியுடன், பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, துாதரகத்தில் பறந்து கொண்டிருந்த மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, பிரிட்டன் அரசை கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியத் துாதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசியக்கொடியை அப்புறப்படுத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது போன்ற நாசவேலைகளை செய்ய இங்கு அனுமதி இல்லை. இனி இந்திய துாதரகத்தின் பாதுகாப்பை பிரிட்டன் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரமாண்டமான மூவர்ணக்கொடி

லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்தில் பறந்த மூவர்ணக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதை அடுத்து, மிகப்பெரிய வடிவிலான மூவர்ணக் கொடி, துாதரக முகப்பில் பறக்க விடப்பட்டது.இந்தப் புகைப்படத்தை, பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும், 'மூவர்ணக் கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.



அமெரிக்காவிலும் போராட்டம்

பிரிவினைவாத தலைவர் அம்ரித்சிங் பாலுக்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், துாதரகத்தில் காலிஸ்தான் இயக்கத்தின் கொடியையும் ஏற்றினர். இதை உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினர்.இச்சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல், ஆஸ்திரேலிய பார்லி., அருகே, அம்ரித்சிங் பாலுக்கு ஆதரவாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X