டில்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம்: பிரதமருக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: டில்லி மாநில பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.டில்லி மாநில பட்ஜெட் மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு பதில் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி மாநில பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news

டில்லி மாநில பட்ஜெட் மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு பதில் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி, டில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ம் தேதி துவங்கியது. பட்ஜெட் இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்பட இருந்தது.



latest tamil news

ஆனால் சில காரணங்களுக்காக, மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும் படி அறிவித்தது. இதனால் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரி., எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 75 ஆண்டுகளில் பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். டில்லி மக்கள் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? தயவு செய்து, டில்லி பட்ஜெட்டை தடை செய்யாதீர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன், தங்கள் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

22-மார்-202305:52:06 IST Report Abuse
ராஜா டில்லி மக்கள் மீதல்ல அதிருப்தி அடுத்து உன்னை என்ன செய்வது என்னும் யோசனையாகக்கூட இருக்கலாம்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
21-மார்-202313:53:18 IST Report Abuse
GMM முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உதவ துணை முதல்வர். துணை முதல்வரை கலால் ஊழலில் சிக்க வைத்த பின் கெஜ்ரி பொறுப்பு ஏற்று, பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்? கைலாஷ் ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? கெஜ்ரி விலகி நின்று வேடிக்கை பார்க்கும் உள் நோக்கம் புரியவில்லை. டெல்லி, பஞ்சாப் போராட்ட உச்ச நிலைக்கு கெஜ்ரி முக்கிய காரணம்? நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார். அரசியலுக்கு நிதி தேவை. அதனை ஊழல், வெளிநாட்டில் இருந்து பெற்று வருவதை புரிய முடியும்.
Rate this:
Cancel
21-மார்-202310:50:22 IST Report Abuse
S SRINIVASAN what ever political differences is there it shd not be done PM immediately intervene and do the necessary
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X