நமது தூதரகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல் தேசபக்தி பேசும் மத்திய அரசு: காங்., தலைவர் கார்கே

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத மத்திய பா.ஜ., அரசு, தேசபக்தி பற்றி பேசி வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் லண்டனில் தேசத்தை இழிவுபடுத்தியதாக பா.ஜ., தொடர்ந்து குற்றம் சாட்டுவதுடன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என
Center talking about patriotism without condemning attack on our embassy: Congress, President  நமது தூதரகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல் தேசபக்தி பேசும் மத்திய அரசு: காங்., தலைவர் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத மத்திய பா.ஜ., அரசு, தேசபக்தி பற்றி பேசி வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.


காங்கிரஸ் எம்.பி., ராகுல் லண்டனில் தேசத்தை இழிவுபடுத்தியதாக பா.ஜ., தொடர்ந்து குற்றம் சாட்டுவதுடன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பார்லி.,யின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், பிரதமர் மோடியும் முன்பு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது நாட்டு மக்கள் குறித்து பேசியதாக காங்கிரசும் பதிலுக்கு பேசி வருகிறது.



latest tamil news

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‛ராகுல் நிச்சயமாக மன்னிப்பு கேட்க மாட்டார். நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத வரையில் மீண்டும் மீண்டும் அதே கோரிக்கையை எழுப்புவோம்.

இது பிரச்னையில் இருந்து திசைத்திருப்பும் செயல். நமது தூதரகம் தாக்கப்பட்டுள்ளது குறித்து அவர்கள் (பா.ஜ., அரசு) எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. வங்கி மோசடியில் ஈடுபட்ட மெஹூல் சோக்ஷிக்கு பாதுகாப்பு கொடுத்த இவர்கள் தேசபக்தி பற்றி பேசி வருகின்றனர்' எனக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

21-மார்-202318:44:05 IST Report Abuse
பேசும் தமிழன் ஏன்...நீங்கள் கூட காங்கிரஸ் கட்சி தலைவர் தானே ...நீங்களும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்.... சரி சரி நீங்கள் நாட்டுக்கு ஆதரவாக எப்போது பேசி இருக்கிறீர்கள் ???
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
21-மார்-202318:25:18 IST Report Abuse
Narasimhan தாக்கியதே உங்கள் கைக்கூலிகள்தான்
Rate this:
Cancel
21-மார்-202318:23:46 IST Report Abuse
பேசும் தமிழன் உங்கள் பப்பு தான் இந்தியாவில் ...இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மூக்கை நுழைக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டவர் ....அவர் சொன்னால் ஒருவேளை அமெரிக்கா கேட்கும் !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X