ஊழல் எதிர்க்கட்சியினர் பார்லி., அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர்: அனுராக் தாக்கூர் காட்டம்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்டை நடக்க விடாமல் தடுக்கின்றனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்டை நடக்க விடாமல் தடுக்கின்றனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.




latest tamil news


இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் முடங்கி வருகின்றது.


இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி மாநில பட்ஜெட்டை அனுமதி தரக் கோரி மார்ச் 17ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டில்லி அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட இருந்த, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் பதிலுக்காக டில்லி அரசு காத்திருக்கிறது. இதற்கு விரைவில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கும்.



latest tamil news


ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்ட் அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர். நான் அரவிந்த் கெஜ்ரிவால் விடம், ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் படித்தவர் தானே... ஏன் உங்கள் சுகாதார அமைச்சரும், துணை அமைச்சரும் சிறைக்குள் இருக்கிறார்கள். உலகில் எங்கு நிலநடுக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி செய்து வருகிறது.


நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இந்தியாதான் முதலில் நிவாரண உதவி வழங்கியது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இந்தியா தான் முதலில் உதவிகள் செய்தது. இப்போது செயல்படும் அரசு உதவி வழங்குபவர்களாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

g.s,rajan - chennai ,இந்தியா
21-மார்-202322:00:02 IST Report Abuse
g.s,rajan இனி இந்தியாவில் ஆயிரத்தி எட்டு கட்சிகள் வேண்டாம், ஒரே ஒரு கட்சி போதும்,எதிர்க் கட்சிகள் இருந்தால்தானே தொல்லை,எல்லாக் கட்சிகளையும் கூண்டோட ஒழிச்சிடுங்க ... .
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-மார்-202321:54:56 IST Report Abuse
Ramesh Sargam எதிர்கட்சியினரால் ஊழல் எதுவும் செய்யமுடியவில்லை. ஆகையால் இப்படி பார்லி., அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர்.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
21-மார்-202320:59:20 IST Report Abuse
K.n. Dhasarathan அமைச்சரே ஒரு சின்ன கணக்கு , 30 ஏம்.பி. அவை நடவடிக்கையை தடுத்து விட்டார்கலா?, 300 எம் பி க்கள் அமளி பண்ண முடியுமா?. சபையை நடத்த உங்களுக்கு இஷ்டமில்லை, தைரியமும் இல்லை, நாடகம் வெற் ரியக்காத்தான் போகிறது, ஆனால் மக்களை எப்போதுமே ஏமாற்ற முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X