ஊட்டி: அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதை தொடர்ந்து, கோடநாடு வழக்கு ஏப்., 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார், அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர்.
வழக்கு விசாரணை துவங்கியதும், கோடநாடு வழக்கில் சி.பி.சி.ஐ.டி.., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருவதாக கூறி, அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி முருகன், வழக்கை ஏப்., 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அரசு வக்கில் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தலைமையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மின்னணு சார்ந்த தொலைத் தொடர்பு குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதால் அரசு தரப்பில் நீதிபதியிடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கினை ஏப்., 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். என்றார்.