கோடநாடு வழக்கு ஏப்., 28க்கு ஒத்திவைப்பு

Added : மார் 21, 2023 | |
Advertisement
ஊட்டி: அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதை தொடர்ந்து, கோடநாடு வழக்கு ஏப்., 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார், அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர்.வழக்கு விசாரணை துவங்கியதும், கோடநாடு வழக்கில்
Kodanadu case adjourned to Apr 28  கோடநாடு வழக்கு ஏப்., 28க்கு ஒத்திவைப்பு

ஊட்டி: அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதை தொடர்ந்து, கோடநாடு வழக்கு ஏப்., 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார், அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர்.


வழக்கு விசாரணை துவங்கியதும், கோடநாடு வழக்கில் சி.பி.சி.ஐ.டி.., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருவதாக கூறி, அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி முருகன், வழக்கை ஏப்., 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


அரசு வக்கில் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தலைமையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மின்னணு சார்ந்த தொலைத் தொடர்பு குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதால் அரசு தரப்பில் நீதிபதியிடம் கால அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கினை ஏப்., 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X