காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை

Added : மார் 21, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன், 28. இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதனால் பெண்வீட்டாருக்கு ஜெகன் மேல் கோபம் இருந்துள்ளது. இன்று(மார்ச் 21) மதியம் கே.ஆர்.பி., அணை அருகே தர்மபுரி
Love married youth hacked to death  காதல் திருமணம் செய்த வாலிபர்  வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன், 28. இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதனால் பெண்வீட்டாருக்கு ஜெகன் மேல் கோபம் இருந்துள்ளது.

இன்று(மார்ச் 21) மதியம் கே.ஆர்.பி., அணை அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஜெகன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஜெகனை அவர் மனைவி சரண்யாவின் தந்தை தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து நடுரோட்டில் வெட்டி கொன்றனர். சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கத்தியுடன் பைக்கில் ஏறி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.. சரோஜ்குமார் தாக்கூர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
22-மார்-202317:35:03 IST Report Abuse
Gokul Krishnan இப்படி ஜாதி வெறி பிடித்த மிருகங்கள் ஒரு உயிரை எடுத்து எதை சாதிக்க போகின்றனர் இதற்கு மிக கடுமையாக தண்டனை தர வேண்டும் விரைவில் ஆனால் அது நடக்குமா என்றால் பெரிய கேள்வி குறி
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
21-மார்-202319:19:07 IST Report Abuse
GMM திராவிட இயக்கம் பெற்றோர்கள் அனுமதியுடன் திருமணம் / மத மாற்றம் செய்ய, சட்ட மசோதா தாக்கல் செய்து, சட்டம் இயற்ற விரும்பவில்லை? குடும்ப கலாச்சாரத்தில் சமூக பாதுகாப்பு தேவை. பாக பிரிவினை / கடன் அடைப்பு / இறுதி சடங்கு குடும்பத்துடன் / சட்டத்துடன் பின்னி பிணைந்து விட்டது.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
21-மார்-202319:01:27 IST Report Abuse
Oru Indiyan இந்த அகௌர்வ கொலைக்கு முடிவே இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X