ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் கட்கரிக்கு கொலை மிரட்டல்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
நாக்பூர் :மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்புகள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பா.ஜ., மூத்தத் தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இங்கு, அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமாக அலுவலகம்
Gadkari was threatened with death for Rs 10 crore  ரூ.10 கோடி கேட்டு மத்திய அமைச்சர் கட்கரிக்கு கொலை மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர் :மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்புகள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ., மூத்தத் தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இங்கு, அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமாக அலுவலகம் உள்ளது.


latest tamil news



இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்திற்கு இன்று (மார்ச்.21) தொலைபேசி வாயிலாக மூன்று முறை கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன.

இது குறித்து நிதின் கட்கரியின் அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து, அமைச்சர் நிதின் கட்கரி வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.



போலீசார் கூறியதாவது:மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு காலை இரு முறை, மதியம் ஒருமுறை என, மூன்று கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. தொலைபேசியில் பேசிய ஜெயேஷ் புஜாரி என்பவர், 10 கோடி ரூபாய் தரவில்லை எனில் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.இதே நபர், கடந்த ஜனவரி மாதமும், 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-202307:19:04 IST Report Abuse
venugopal s ஒரு மத்திய பாஜக அரசின் அமைச்சரை மிரட்டல் விடுத்தவர் கேவலம், பிச்சைக்காசு,வெறும் பத்து கோடி ரூபாய் கேட்டு அவமானப் படுத்தி விட்டாரே!
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-மார்-202322:44:00 IST Report Abuse
g.s,rajan இந்தியாவுல வழக்கமா இவருதான் எங்க பார்த்தாலும் டோல் கேட் போட்டு மக்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பாரு ,ஆனா இவரிடமே கொள்ளை அடிக்க நினைக்கிறாங்க ,மிரட்டுறாங்க ,என்ன ஒரு ஆச்சரியம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X