புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இன்று பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
டில்லி ஆம்ஆத்மி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டில் கவிதாவிற்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது., இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கவிதாவிற்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார். அவரிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த கவிதா காரில் ஏறிசென்றார்.