எம்.ஜி.ஆர்.நகர் தி.நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 30 வயது பெண். இவர், ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கணவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வினோத் என்பவருக்கும், தகராறு இருந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 5ம் தேதி இரவு வினோத்திற்கும் அந்த பெண்ணிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், வினோத் அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்ததுடன் காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதை தடுக்க வந்த அவரது கணவரின் கையை கடித்து, தாக்கியுள்ளார். இது குறித்த புகாரையடுத்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்து, வினோத்தை நேற்று கைது செய்தனர்.